sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் ஓய்வெடுக்கும் மாடுகளால் அவதி

/

ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் ஓய்வெடுக்கும் மாடுகளால் அவதி

ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் ஓய்வெடுக்கும் மாடுகளால் அவதி

ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் ஓய்வெடுக்கும் மாடுகளால் அவதி


ADDED : ஜூலை 16, 2025 12:39 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலத்தின்கீழ், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் படுத்து ஓய்வெடுக்கும் மாடுகளை பிடித்து மாட்டு தொழுவத்தில் அடைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில், வண்டலுார் ---- வாலாஜாபாத் சாலைகள் சந்திக்கும் பகுதியான ஒரகடத்தில் மேம்பாலம் அமைந்துள்ளது.

இப்பகுதியில் மாடுகளை வைத்திருப்பவர்கள், தங்களின் மாடுகளை தொழுவத்தில் கட்டி வைத்து பராமரிப்பது இல்லை.

மாறாக அவை இரவு நேரங்களில் சாலையில் படுத்து ஓய்வெடுக்கிறது. ஒரகடம் மேம்பாலத்தின் கீழ், போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சாலையை மறித்து நிற்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

திடீரென சாலையின் குறுக்கே மாடுகள் ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது.

எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, மாட்டுத் தொழுவத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us