ADDED : மே 18, 2025 10:47 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில் இருந்து, அரங்கநாதபுரம் கிராமத்திற்கு செல்லும், அய்யனேரிக்கரை சாலை உள்ளது. இந்த மண் சாலை வழியாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், புள்ளலுார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கணபதிபுரம், சித்துார் ஆகிய கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த ஏரிக்கரை சாலையை, தார் சாலையாக செப்பணிட வேண்டும் என, பல்வேறு கிராமத்தினர் கோரிக்கை விடுத்தும், நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் செவி சாய்க்கவில்லை என, புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
தற்போது, மழைக்காலம் துவங்க இருப்பதால், ஏரிக்கரை சாலையில் இருக்கும் மண் சாலை பள்ளத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, புள்ளலுார் - அரங்கநாதபுரம் மண் சாலையை, மழைக்காலம் துவங்கும் முன் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.