sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த குடிநீர் தொட்டி சிட்டியம்பாக்கத்திதில் அவலம்

/

சேதமடைந்த குடிநீர் தொட்டி சிட்டியம்பாக்கத்திதில் அவலம்

சேதமடைந்த குடிநீர் தொட்டி சிட்டியம்பாக்கத்திதில் அவலம்

சேதமடைந்த குடிநீர் தொட்டி சிட்டியம்பாக்கத்திதில் அவலம்


ADDED : பிப் 20, 2025 12:18 AM

Google News

ADDED : பிப் 20, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்டியம்பாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம் இலுப்பப்பட்டு ஊராட்சி, சிட்டியம்பாக்கம் கிராமத்தில், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக, கிராமத்தினருக்கு குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குடிநீர் தொட்டியை தாங்கும் துாண்களில், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, சிறுவர்கள் விளையாடுகின்றனர்.

கால்நடைகளும் அப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. அப்பகுதியில் வீடுகள் உள்ளதால், அதிகளவில் மக்கள் நடமாட்டமு உள்ளது. இதனால், வலுவிழந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால், பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் எனவும், புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை தொட்டியை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிட்டியம்பாக்கம் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அதிகாரி கூறியதாவது:

சிட்டியம்பாக்கத்தில், சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மாற்றாக, அதே பகுதியில் புதிதாக மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு, வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், புதிய தொட்டி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பழைய தொட்டி இடித்து அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us