/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த மிளகர்மேனி தரைப்பாலம்
/
சேதமடைந்த மிளகர்மேனி தரைப்பாலம்
ADDED : செப் 22, 2024 02:32 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்லும் சாலையில், மிளகர்மேனி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில், சாலையின் குறுக்கே, விவசாய நிலங்களில் இருந்து வழிந்தோடும் மழைநீர் வெளியேறும் வகையில், தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தரைப்பாலத்தின் நடுப்பகுதி, 2 ஆண்டுகளுக்கு முன் சேதமாகி ஓட்டையாக இருந்தது. இதனால், இரவு நேரங்களில், இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகினர்.
இதையடுத்து, அந்த தரைபாலம் சீரமைப்பு பணி அப்போது மேற்கொள்ளப்பட்டது. எனினும், தரமற்ற பணி காரணமாக ஓட்டையாக இருந்து சீர் செய்த பகுதி தற்போது மீண்டும் சேதமாகி வருகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த தரைப்பாலத்தில் சேதமான பகுதியை சீரமைக்க வேண்டும் என, மிளகர்மேனி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.