/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீரமைத்தும் சேதமடைந்த பனப்பாக்கம் சாலை
/
சீரமைத்தும் சேதமடைந்த பனப்பாக்கம் சாலை
ADDED : அக் 23, 2024 11:16 PM

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில் இருந்து, திருமால்பூர் வழியாக, பனப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலையின் வழியாக பள்ளூர், கணபதிபுரம், காஞ்சிபுரம், புள்ளலுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு தேவைகளுக்கு திருமால்பூர், பனப்பாக்கம், ஓச்சேரி ஆகிய பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர்.
இச்சாலை, இரு மாதங்களுக்கு முன், குண்டும் குழியுமாக சேதமடைந்திருந்தன. கடந்த மாத இறுதியில், நெடுஞ்சாலை துறையினர் சேத பள்ளங்களில், குண்டும் குழியுமான இடத்தில் மட்டும் தார் ஜல்லியை கொட்டி செப்பனித்தனர்.
சமீபத்தில் பெய்த மழையால், தார் ஜல்லி கலவை பெயர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக உள்ளன. இந்த சேதமடைந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது, வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பள்ளூர் - -பனப்பாக்கம் சாலையில், சிதறி கிடக்கும் ஜல்லி சாலையில், தார் கொட்டி செப்பனிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.