/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த மின்கம்பம் விஷார் கிராமத்தினர் பீதி
/
சேதமடைந்த மின்கம்பம் விஷார் கிராமத்தினர் பீதி
ADDED : டிச 09, 2024 01:22 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் விஷார் புதிய காலனியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக, சாலையோரம் மின்தட பாதைக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து, அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, மையப்பகுதியில் சிமென்ட் காரை உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பம் பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது நொறுங்கி விழுந்தால், பெரிய அளவில் மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, விஷார் ஊராட்சி, புதிய காலனியில் சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.