sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கனரக வாகனங்களால் சேதமான சாலை புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

/

கனரக வாகனங்களால் சேதமான சாலை புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

கனரக வாகனங்களால் சேதமான சாலை புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

கனரக வாகனங்களால் சேதமான சாலை புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு


ADDED : நவ 12, 2024 12:26 AM

Google News

ADDED : நவ 12, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர், மதுார் சுற்றுவட்டார பகுதிகளில், தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் ஏராளமாக இயங்குகின்றன.

இத்தொழிற்சாலைகளில் இருந்து இயக்கப்படும் ஏராளமான கனரக வாகனங்கள், கிராம சாலைகள் மற்றும் திருமுக்கூடல் பாலாற்று பாலம் வழியாக பல பகுதிகளுக்கு லோடு ஏற்றி சென்று வருகின்றன.

இரவு, பகலாக இயங்கும் இந்த வாகனங்களால், மதுார், பழவேரி, திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதிகளின் தார் சாலைகள், ஆங்காங்கே சேதமடைந்து, புழுதி பறக்கும் சாலையாக மாறி வருகிறது.

இச்சாலைகளில், மண் புழுதி பறக்கமால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், லாரியில் தண்ணீர் எடுத்து வந்து, புழுதி பறக்கும் சாலைகளில் தண்ணீர் ஊற்றும் நடவடிக்கை இருந்து வருகிறது.

எனினும், வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே சாலையில் தண்ணீர் ஊற்றுவதாகவும், தண்ணீர் ஊற்றாத நாட்களில், சாலையில் பயணிக்க முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, புழுதி பறக்கும் இந்த சாலைகளில், தினசரி தவறாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us