ADDED : ஏப் 15, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரகடம்,சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன், 33, வல்லம் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம், காலை 10:00 மணி அளவில், அதே பகுதி விளையாட்டு திடலில் மாங்காய் பறிக்க சென்றுள்ளார். மரத்தில் இருந்து விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள், காயமடைந்தவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து, ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.