/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உயிருடன் இருக்கும் மாநகராட்சி கவுன்சிலருக்கு இறப்பு சான்று அதிர்ச்சி தனியார் மருத்துவர் மீது கலெக்டர் அலுவலகத்தில் பகீர் புகார்
/
உயிருடன் இருக்கும் மாநகராட்சி கவுன்சிலருக்கு இறப்பு சான்று அதிர்ச்சி தனியார் மருத்துவர் மீது கலெக்டர் அலுவலகத்தில் பகீர் புகார்
உயிருடன் இருக்கும் மாநகராட்சி கவுன்சிலருக்கு இறப்பு சான்று அதிர்ச்சி தனியார் மருத்துவர் மீது கலெக்டர் அலுவலகத்தில் பகீர் புகார்
உயிருடன் இருக்கும் மாநகராட்சி கவுன்சிலருக்கு இறப்பு சான்று அதிர்ச்சி தனியார் மருத்துவர் மீது கலெக்டர் அலுவலகத்தில் பகீர் புகார்
ADDED : நவ 03, 2025 10:08 PM

காஞ்சிபுரம் :உயிருடன் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலருக்கு, மருத்துவர் ஒருவர் இறப்பு சான்றிதழ் கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு இறந்தவர் உடலை பார்க்காமலேயே, சான்றிதழ் வழங்கும் தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க., கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குள் வசிப்போருக்கான பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. ஒவ்வொரு மாதமும், 100 முதல் 150 பேர் வரையிலான, இறப்பு சான்றிதழ் பதிவுகள் நடக்கின்றன. இயற்கை மரணமாக இருந்தாலும், விபத்து அல்லது கொலை போன்ற இயற்கைக்கு மாறான மரணமாக இருந்தாலும், மருத்துவரின் நேரடி கள பரிசோதனைக்கு பிறகு தான், இறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
சிலர் வயது மூப்பு காரணமாக இறந்து பல நாட்கள் கழித்த, உறவினர்கள் விண்ணப்பிக்கும்போது, சுகாதார ஆய்வாளர்கள், விண்ணப்பதாரரின் வீட்டருகே விசாரணை செய்து இறப்பு சான்றிதழ் வழங்குவது வழக்கம்.
இந்நிலையில், காஞ்சிபுரம் நகரில், உயிருடன் உள்ள மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலருக்கு, மருத்துவர் இறப்பு சான்றிழ் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் பெரும்பாலானோருக்கு ஒரே மருத்துவர் பரிந்துரை செய்வதாக வந்த தகவலையடுத்த, 48 வது வார்டு மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் கார்த்தி என்பவர், அவருக்கு தெரிந்த நபரை கொண்டு, தனது இறப்பு சான்றிதழ் கேட்டு, காஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் உள்ள டாக்டர் வேணுகோபன் என்ற மருத்துவரிடம் விண்ணப்பம் செய்துள்ளார்.
இறந்தது யார், எப்படி இறந்தார் என விசாரிக்காமலும், இறந்த நபரின் உடலை பார்க்காமலேயே, மருத்துவர் வேணுகோபன், 500 ரூபாய் பெற்றுக்கொண்டு,  இறப்பு சான்றிதழ் கொடுத்து விட்டதாக, தி.மு.க., கவுன்சிலர் கார்த்தி கூறினார்.
மேலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவர் முருகேசனிடம், மருத்துவர் கொடுத்த சான்று மற்றும் ஆவணங்களுடன் மனு அளித்துள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டு நான் இறந்து விட்டதாக சான்று அளித்துள்ள மருத்துவர் வேணுகோபன், அவருக்கான மருத்துவர் பணியை தவறாக பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது என, மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், இந்த விவகாரத்தில் நேரடியாக விசாரணை நடத்துவதாக கவுன்சிலர் கார்த்தியிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் வேணுகோபன் அளித்த சான்றிதழ் பல்வேறு சான்றிதழ் பற்றியும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கவுன்சிலர் கார்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

