sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அழுகிய ஆண் சடலம் கிணற்றில் மீட்பு

/

அழுகிய ஆண் சடலம் கிணற்றில் மீட்பு

அழுகிய ஆண் சடலம் கிணற்றில் மீட்பு

அழுகிய ஆண் சடலம் கிணற்றில் மீட்பு


ADDED : ஜூலை 26, 2025 09:06 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:-பெருநகர் கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த, அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மானாம்பதி கூட்டுசாலையின் பின்புறம் மேய்ச்சல் புறம்போக்கு நிலப்பரப்பு உள்ளது.

அப்பகுதியில் வசிப்போர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில், அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதந்தது. இதை கண்ட கால்நடை மேய்ப்பவர்கள் இது குறித்து பெருநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின், போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், கிணற்றில் மிதந்து கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இறந்து கிடந்தவருக்கு 30 - 35 வயது வரை இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us