sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருவங்கரணையில் பயன்பாடில்லாத பள்ளி கட்டடத்தை அகற்ற கோரிக்கை

/

திருவங்கரணையில் பயன்பாடில்லாத பள்ளி கட்டடத்தை அகற்ற கோரிக்கை

திருவங்கரணையில் பயன்பாடில்லாத பள்ளி கட்டடத்தை அகற்ற கோரிக்கை

திருவங்கரணையில் பயன்பாடில்லாத பள்ளி கட்டடத்தை அகற்ற கோரிக்கை


ADDED : அக் 25, 2025 02:04 AM

Google News

ADDED : அக் 25, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்: திருவங்கரணையில் பயன்பாடு இல்லாத கைவிடப்பட்ட பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருவங்கரணை கிராமம். இக்கிராமத்தில் இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான கட்டடம் மிகவும் பழுதடைந்து இருந்தது.

இதையடுத்து, அதே பகுதியில் மாற்று கட்டடம் ஏற்படுத்தப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அப்புதிய கட்டடத்தில் பள்ளி இயங்குகிறது.

எனினும், பழுதடைந்த அப்பழைய பள்ளி கட்டடம் அகற்றப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. பயன்பாடற்ற இக்கட்டடத்தின் அருகாமையில் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இயங்குகிறது.

இதனால், பழுதான பழைய பள்ளி கட்டடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே, இடிந்து விழக்கூடும் நிலையிலான கைவிடப்பட்ட பள்ளி கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us