தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 24, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2025 01:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்திரமேரூர்:பொற்பந்தலில் பணி நீக்கம் செய்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திரமேரூர் தாலுகா, பொற்பந்தல் கிராமத்தில், 'பியூர் பெட்ரோகேம்' தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. வாகனங்களுக்கு தேவைப்படும் கிரீஸ் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், 2021ல் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக, 10 நிரந்தர பணியாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இது தொடர்பாக, தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 10 நிரந்தர பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், பணி வழங்க தொழிற்சாலை நிர்வாகம் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, சி.ஐ.டி.யூ., பியூர் பெட்ரோ தொழிலாளர் சங்கம் சார்பில், பொற்பந்தலில் தொழிற்சாலை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கத் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலர் முத்துகுமார் கண்டன உரையாற்றினார். அதை தொடர்ந்து, 10 நிரந்தர தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது, பின் தேதியிட்ட சம்பள பாக்கியை உடனே வழங்குவது குறித்த நீதிமன்ற தீர்ப்பை உடனே அமல்படுத்த தயக்கம் காட்டும், தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us