/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண்ணிடம் சீண்டல் பல் மருத்துவர் கைது
/
பெண்ணிடம் சீண்டல் பல் மருத்துவர் கைது
ADDED : ஜூன் 30, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், பல் மருத்துவ சிகிச்சைக்கு சென்ற கல்லுாரி மாணவியிடம், பாலியல் தொந்தரவு செய்த பல் மருத்துவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த, திருப்பருத்திக்குன்றம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் மணிகண்டன், 29, பல் மருத்துவர். இவர், காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில், பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்த மருத்துவமனைக்கு சென்ற தனியார் கல்லுாரி மாணவியிடம், பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அந்த பெண், சிவ காஞ்சி போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த பெண் அளித்த புகாரின்படி, மணிகண்டனை போலீசார் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.