/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காமாட்சியம்மன் கோவிலில் நாளை தெப்போத்சவம்
/
காமாட்சியம்மன் கோவிலில் நாளை தெப்போத்சவம்
ADDED : ஏப் 05, 2025 09:55 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், மூன்று நாட்கள் தெப்போத்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தெப்போத்சவம் நாளை துவங்குகிறது.
இதில், கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தம் எனப்படும், தெப்ப குளத்தில், தொடர்ந்து மூன்று நாட்கள் தெப்போத்சவம் நடக்கிறது. முதல் நாளான நாளை, மாலை 6:00 மணிக்கு, மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், மலர் அலங்காரத்தில், எழுந்தருளும் காமாட்சியம்மன், குளத்தில் மூன்று முறை சுற்று வலம் வருகிறார்.
இரண்டாம் நாள் தெப்போற்சவமான நாளை மறுநாள், ஐந்து சுற்றும், நிறைவு நாளான வரும் 9ம் தேதி, ஏழு முறையும் காமாட்சியம்மன் தெப்பத்தில் வலம் வருகிறார்.
தெப்போத்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாராயணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

