sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளி கட்டுமான பணி முடிக்க துணை மேயர் அறிவுறுத்தல்

/

பள்ளி கட்டுமான பணி முடிக்க துணை மேயர் அறிவுறுத்தல்

பள்ளி கட்டுமான பணி முடிக்க துணை மேயர் அறிவுறுத்தல்

பள்ளி கட்டுமான பணி முடிக்க துணை மேயர் அறிவுறுத்தல்


ADDED : செப் 23, 2024 05:52 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ -- -மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டடம், அப்பகுதியில் உள்ள சின்னவேப்பங்குளக்கரையை சுற்றி, வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக அமைந்துள்ளன.

இதனால், ஆய்வகம், சத்துணவு போன்ற அறைகளுக்கு செல்ல, சாலையை கடந்தும், குளத்தை சுற்றியும் மாணவர்கள் வர வேண்டியுள்ளது.

இதனால், இப்பள்ளிக்கு ஒரே வளாகத்தில் பள்ளி கட்டடம் அமைக்க வேண்டும் என, பெற்றோர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், திருக்காலிமேடு குறுக்கு கவரைத் தெருவில், ஒரே வளாகத்தில் பள்ளி கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் 7.25 கோடி ரூபாய் செலவில் 2 அடுக்குமாடியுடன், 12 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டடம் மேலும், சமையல் அறை, ஆய்வகம், மாணவ- -- மாணவியருக்கு என, தனித்தனியாக கழிப்பறை வசதியுடன், புதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணி, கடந்த ஜூன் மாதம் துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், புதிய பள்ளி கட்டுமானப் பணியை அப்பகுதி வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணைமேயருமான குமரகுருநாதன் நேற்று ஆய்வு செய்தார்.

கட்டுமானப் பணியை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us