/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துார்வாரும் பணியை முடிக்க துணை மேயர் அறிவுறுத்தல்
/
துார்வாரும் பணியை முடிக்க துணை மேயர் அறிவுறுத்தல்
ADDED : டிச 03, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளான, எம்.ஜி.ஆர்., நகர், கவரை தெரு, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதியில், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கவரை தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மற்றும் மஞ்சள் நீர் கால்வாயில்ஏற்பட்டிருந்த அடைப்புகளை அகற்றி, துார்வாரும் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி ஊழியர் களுக்கு அறிவுறுத்தினார்.