/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி பொய்கை ஆழ்வார்குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
/
காஞ்சி பொய்கை ஆழ்வார்குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
காஞ்சி பொய்கை ஆழ்வார்குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
காஞ்சி பொய்கை ஆழ்வார்குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
ADDED : செப் 13, 2025 12:30 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொய்கை ஆழ்வார்குளத்தில் வளர்ந்துள்ள புல், செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என, பக்தர் களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம், யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம், கோவில் அருகில் உள்ளது.
பொய்கை ஆழ்வார் இக்குளத்தில் அவதரித்ததால், பொய்கை ஆழ்வார் குளம் என அழைக்கப் படுகிறது.
பராமரிப்பு இல்லாத இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, சென்னை பெட்ரோபேக் ஆயில் அண்டு கேஸ் நிறுவனத்தின், இயற்கை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்துதல் திட்டம் மற்றும் எக்ஸ்னோரா இயற்கை சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 17.8 லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஆண்டு குளம் சீரமைக்கப் பட்டது.
இந்நிலையில், கோடை வெயில் காரணமாக இரு மாதங்களுக்கு முன் குளம் வற்றியது. தற்போது, குளத்தில் புல், செடிகள் வளர்ந்துள்ளதால், மழைக்காலத்தில் நீர்ப் பிடிப்பு குறைந்து வருகிறது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், காஞ்சி புரம் பொய்கை ஆழ்வார் குளத்தில் வளர்ந்துள்ள புல், செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர் களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.