sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சர்வதீர்த்த குளம் நடைபாதை மோசம் சீரமைக்க கோரி பக்தர்கள் வலியுறுத்தல்

/

சர்வதீர்த்த குளம் நடைபாதை மோசம் சீரமைக்க கோரி பக்தர்கள் வலியுறுத்தல்

சர்வதீர்த்த குளம் நடைபாதை மோசம் சீரமைக்க கோரி பக்தர்கள் வலியுறுத்தல்

சர்வதீர்த்த குளம் நடைபாதை மோசம் சீரமைக்க கோரி பக்தர்கள் வலியுறுத்தல்


ADDED : ஜன 26, 2025 01:31 AM

Google News

ADDED : ஜன 26, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ள சர்வதீர்த்த குளம், ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு, 45 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் துார்வாரப்பட்டு, குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.

மேலும், குளக்கரையை சுற்றிலும் டைல்ஸ் பதிக்கப்பட்டு, நடைபயிற்சிக்கான பாதை அமைக்கப்பட்டது. குளத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிப்போர், தினமும் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், நடைபாதையில் செடி, கொடிகள் வளர்ந்து, பாம்பு, தேள், பூரான், வண்டு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சமடைந்தன. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதை பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

எனவே, சர்வதீர்த்த குளக்கரை நடைபாதையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, நடைபாதையை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஹிந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தினர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம், சர்வதீர்த்த குளக்கரை நடைபாதையில் வளர்ந்த செடி, கொடிகள் அற்றப்பட்டன. இருப்பினும், பகுதிவாசிகள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

பராமரிப்பு இல்லாததால், நடைபாதையில் மீண்டும் செடி, கொடிகள் வளர்ந்து, பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, நடைபாதையை சீரமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us