sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் பழுது வரதர் கோவிலில் பணத்தை இழக்கும் பக்தர்கள்

/

மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் பழுது வரதர் கோவிலில் பணத்தை இழக்கும் பக்தர்கள்

மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் பழுது வரதர் கோவிலில் பணத்தை இழக்கும் பக்தர்கள்

மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் பழுது வரதர் கோவிலில் பணத்தை இழக்கும் பக்தர்கள்


ADDED : மார் 19, 2025 12:34 AM

Google News

ADDED : மார் 19, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழக அரசின், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், ஆறு மாதங்களுக்கு முன், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டது.

இந்த இயந்திரத்தில், 10 ரூபாய் நாணயம் அல்லது நோட்டு செலுத்தினால், பக்தர்களுக்கு மஞ்சப்பை வழங்கும். இந்நிலையில், ஒரு மாதமாக இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளது.

செயல்படாமல் முடங்கி கிடக்கும் இயந்திரத்தை அப்புறப்படுத்தாமல் உள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், மஞ்சப்பை பெறுவதற்காக இயந்திரத்தில், 10 ரூபாய் செலுத்துகின்றனர். மஞ்சப்பை வராத நிலையில், பணத்தையும் இழந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

எனவே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் செயல்படாமல் உள்ள மஞ்சப்பை வழங்கும் தானிய இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us