sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பார்க்கிங் வசதி இல்லாததால் திருப்புட்குழியில் பக்தர்கள் அவதி

/

பார்க்கிங் வசதி இல்லாததால் திருப்புட்குழியில் பக்தர்கள் அவதி

பார்க்கிங் வசதி இல்லாததால் திருப்புட்குழியில் பக்தர்கள் அவதி

பார்க்கிங் வசதி இல்லாததால் திருப்புட்குழியில் பக்தர்கள் அவதி


ADDED : நவ 07, 2024 12:40 AM

Google News

ADDED : நவ 07, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலுச்செட்டிசத்திரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் அமாவாசை மற்றும் நேர்த்திக்கடன் செய்ய, பக்தர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்குசக்கர வாகனங்களில், வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு, போதிய இட வசதி இல்லை. இதனால், வீடுகள் மற்றும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

எனவே, திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இருசக்கரம் மற்றும் நான்குசக்கர வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us