/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முன்பதிவு மையம் துவக்க பக்தர்கள் வலியுறுத்தல்
/
முன்பதிவு மையம் துவக்க பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 18, 2025 12:49 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சாலை தெருவில், திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில், இ - தரிசன டிக்கெட் முன்பதிவு மையம் இயங்கி வந்தது. இங்கு, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், திருப்பதி வெங்கடேச பெருமாளை சிறப்பு தரிசனம் செய்ய 300 ரூபாய் கட்டணத்தில், ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து வந்தனர்.
கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கின் போது, முன்பதிவு மையம் மூடப்பட்டது. கொரோனா ஊரடங்கில் முற்றிலும் தளர்வு ஏற்படுத்தி, இயல்பு நிலை திரும்பி மூன்று ஆண்டுகளை கடந்த நிலையிலும், திருமலை திருப்பதி தேவஸ்தானம், காஞ்சிபுரம் தகவல் மையத்தில் இ- - தரிசன முன்பதிவு மையம் மீண்டும் துவக்கப்படாமல் உள்ளது.
இதனால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தனியாரிடம் கூடுதல் பணம் செலவழித்து முன்பதிவு செய்தாலும், ‛நெட்வொர்க்' பிரச்னை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில், முன்பதிவு செய்ய இயலாத சூழல் உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு மையத்தை மீண்டும் துவக்க, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.