sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மழைநீர் வடிகால்வாய் விடுபட்ட பகுதியால் இடையூறு

/

மழைநீர் வடிகால்வாய் விடுபட்ட பகுதியால் இடையூறு

மழைநீர் வடிகால்வாய் விடுபட்ட பகுதியால் இடையூறு

மழைநீர் வடிகால்வாய் விடுபட்ட பகுதியால் இடையூறு


ADDED : ஆக 28, 2025 01:53 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்,:திம்மராஜம்பேட்டை சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் விடுபட்ட பகுதியில் வாகனங்கள் சென்றுவர ஏதுவாக பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் திம்மராஜம்பேட்டை உள்ளது. இப்பகுதியில், சமீபத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, சாலையையொட்டி உள்ள அப்பகுதி ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் பகுதியில் வழிவிடுவதற்காக சிறிது துாரம் கால்வாய் அமைக்காமல் விடுபட்டது. அதை தொடர்ந்து மீண்டும் அப்பகுதியில் இதுவரை பணி மேற்கொள்ளாமல் உள்ளது.

கால்வாய் பணி முழுமை பெறாததால், ஊராட்சி அலுவலகத்திற்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல இயலாமல் சாலையோரத்தில் நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இப்பகுதி ஊராட்சி அலுவலகத்திற்கு வாகனங்கள் சென்றுவரும் வகையில் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மழைநீர் வடிகால்வாய் பணியின் போது சில இடங்களில் வழி தேவைக்காக இடம் விடப்பட்டது. அவ்வாறு விடுபட்ட இடங்கள் குறித்து கணக்கில் உள்ளதால் அடுத்தடுத்து அப்பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us