/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடில் குழாய் உடைந்து 2 மாதங்களாக வீணாகும் குடிநீர்
/
செவிலிமேடில் குழாய் உடைந்து 2 மாதங்களாக வீணாகும் குடிநீர்
செவிலிமேடில் குழாய் உடைந்து 2 மாதங்களாக வீணாகும் குடிநீர்
செவிலிமேடில் குழாய் உடைந்து 2 மாதங்களாக வீணாகும் குடிநீர்
ADDED : பிப் 17, 2024 11:32 PM

செவிலிமேடு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள செவிலிமேடில் இருந்து ஜெம் நகருக்கு செல்லும் சாலை சந்திப்பில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக குடிநீர், சாலையில் வீணாகி வருகிறது.
இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
நீண்டநேரம் மின்மோட்டார் இயங்குவதால், மின்சாரம் விரயமாவதுடன், மின்மோட்டாரும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது.
எனவே, செவிலிமேடு ஜெம் நகர் சாலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.