ADDED : செப் 09, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம், செப். 10-–
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே மயங்கி கிடந்த 60 வயது மதிக்கத்தக்கவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள கற்பக விநாயகர் கோவில் அருகே, 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு, இரு நாட்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
மயக்க நிலையில் இருந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் மூலம் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார்.
இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பன குறித்து, சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
