sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரேஷன் கடை வளாகத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம்

/

ரேஷன் கடை வளாகத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம்

ரேஷன் கடை வளாகத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம்

ரேஷன் கடை வளாகத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம்


ADDED : அக் 01, 2024 03:27 AM

Google News

ADDED : அக் 01, 2024 03:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சி, பாவாசாகிபேட்டையில், 2013 - 14ல் கழிப்பறை வசதியுடன் ரேஷன் கடை கட்டப்பட்டது.

இக்கடையில், 168 கார்டுதாரர்களுக்கு, கார்டின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடையில் கட்டப்பட்ட கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தாததால், ரேஷன் கடைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவோரும், ரேஷன் கடை ஊழியர்களும் இயற்கை உபாதைக்கு கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:

ரேஷன் கடையில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமரா உடைக்கப்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் ரேஷன் கடை வளாகத்தில் மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு குடிபோதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர்.

எனவே, உடைக்கப்பட்ட, 'சிசிடிவி' கேமராவை சீரமைக்கவும், கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, பூசிவாக்கம் ஊராட்சி தலைவர் லெனின்குமார் கூறியதாவது:

பாவாசாகிபேட்டை ரேஷன் கடை கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை வளாகத்தில் மர்ம நபர்கள் மது அருந்துவது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us