sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தடுப்பு, சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்து புதுப்பேடு கூட்டுச்சாலையில் செல்வோர் அச்சம்

/

தடுப்பு, சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்து புதுப்பேடு கூட்டுச்சாலையில் செல்வோர் அச்சம்

தடுப்பு, சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்து புதுப்பேடு கூட்டுச்சாலையில் செல்வோர் அச்சம்

தடுப்பு, சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்து புதுப்பேடு கூட்டுச்சாலையில் செல்வோர் அச்சம்


ADDED : பிப் 08, 2024 09:45 PM

Google News

ADDED : பிப் 08, 2024 09:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:புதுப்பேடு கூட்டுச்சாலையில் விபத்தை தடுக்க சிக்னல், இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், குன்றத்துார் அருகே, புதுப்பேடு பகுதியில் கூட்டுச்சாலை உள்ளது.

படப்பை, தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் புதுப்பேடு கூட்டுச்சாலையில் இணைந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.

மேலும், புதுப்பேடு கூட்டுச்சாலை அருகே பேருந்து நிறுத்தம், தனியார் மண்டபம், பெட்ரோல் நிலையம், வணிக கடைகள் உள்ளன.

இந்நிலையில், இந்த சாலை சந்திப்பை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

குன்றத்துார் போலீசார்இரும்பு தடுப்புகள் வைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்த தடுப்புக்களும் அகற்றப்பட்டு விட்டன.

இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டம் போல் நுழைந்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது. இந்த கூட்டுச்சாலை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தானியாங்கி சிக்னல் அல்லது தடுப்புக்களை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us