sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செவிலிமேடு அம்மன் கோவிலில் நாளை துரியோதனன் படுகளம்

/

செவிலிமேடு அம்மன் கோவிலில் நாளை துரியோதனன் படுகளம்

செவிலிமேடு அம்மன் கோவிலில் நாளை துரியோதனன் படுகளம்

செவிலிமேடு அம்மன் கோவிலில் நாளை துரியோதனன் படுகளம்


ADDED : மே 16, 2025 09:02 PM

Google News

ADDED : மே 16, 2025 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடில், திரவுபதியம்மன் சமேத தருமராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த மாதம் 30ம் தேதி அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி தினமும், மதியம் 1:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, திருவண்ணாமலை மாவட்டம், நமண்டி கூட்ரோடு கோவிந்தராஜ் மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். திருவடிராயபுரம் முனுமசாமி கவி வாசிக்கிறார்.

விழாவின் மற்றொரு நிகழ்வாக கடந்த 8ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் நெடும்பிறை பொன்னியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின், மஹாபாரத நாடகம் நடந்து வருகிறது.

இதில், கடந்த 12ம் தேதி அர்ச்சுனன் வேடமிட்ட கலைஞர் தபசு மரத்தில் ஏறி தவம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நாளை காலை நடக்கிறது. மாலையில் தீமிதி திருவிழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us