sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

/

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை


ADDED : ஜூன் 23, 2025 01:27 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழாவின், 21வது நாள் உத்சவமான நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் விமரிசையாக நடந்தது.

பெரிய காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதி கிழக்கு பகுதி, பூக்கடை சத்திரம் அருகில் உள்ள தர்மராஜர் சமேத திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த மஹாபாரத விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி தினமும் மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் கோவிந்தராஜ் மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். முனுசாமி கவி வாசித்து வருகிறார்.

விழாவில் மற்றொரு நிகழ்வாக கடந்த 12ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு சிறுவஞ்சிபட்டு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தின், ஆசிரியர் சீதாராமன் குழுவினரின் மஹாபாரத நாடகம் நடந்து வருகிறது.

இதில், 21வது நாள் உத்சவமான நேற்று, காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

மாலை தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்தனர்.






      Dinamalar
      Follow us