sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புழுதி பறக்கும் கீழம்பி சாலை வாகன ஓட்டிகள் அவதி

/

புழுதி பறக்கும் கீழம்பி சாலை வாகன ஓட்டிகள் அவதி

புழுதி பறக்கும் கீழம்பி சாலை வாகன ஓட்டிகள் அவதி

புழுதி பறக்கும் கீழம்பி சாலை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூலை 02, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழம்பி:செவிலிமேடு - கீழம்பி புறவழி சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுமிடத்தில், புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு உயர்மட்டபாலத்தில் இருந்து, சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை, கீழம்பியில் இணையும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இருவழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, செவிலிமேடு-- கீழம்பி புறவழி சாலையை, நான்கு வழி சாலையாக மாற்றும் பணி கடந்த பிப்., மாதம் துவங்கி நடந்து வருகிறது.

சாலை விரிவாக்கப்பணி நடைபெறுமிடங்களில் வானங்கள் செல்லும்போது, பனி மூட்டத்தைப்போல, புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே செல்கின்றனர்.

இவ்வழியாக நடந்து செல்வோர் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண்களில் துாசு விழுவதோடு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, சாலை விரிவாக்க பணி நடைபெறும் இடங்களில், புழுதி பறக்காமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், லாரி வாயிலாக தண்ணீர் தெளிக்கவும், சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us