sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏகாம்பரேஸ்வரர் கோவில் ரூ.87 லட்சத்தில் புனரமைக்க திட்டம்

/

ஏகாம்பரேஸ்வரர் கோவில் ரூ.87 லட்சத்தில் புனரமைக்க திட்டம்

ஏகாம்பரேஸ்வரர் கோவில் ரூ.87 லட்சத்தில் புனரமைக்க திட்டம்

ஏகாம்பரேஸ்வரர் கோவில் ரூ.87 லட்சத்தில் புனரமைக்க திட்டம்


ADDED : ஜூலை 11, 2025 12:58 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்,:தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவில் 87 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் துவங்க உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த, தம்மனுாரில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் கட்டடம் பழுதடைந்து நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது.

கோவில் மண்டபத்திற்குள் மழைநீர் சொட்டுவதோடு, விமான கோபுரமும் மிகவும் சிதிலமடைந்து கான்கிரீட் பெயர்ந்து, செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.

சிதிலமடைந்த இக்கோவிலை புதுப்பிக்க அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்படி, இக்கோவிலை புதுப்பிக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சில மாதங்களுக்கு முன், 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்கோவிலில் வரும் 15ம் தேதி, பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்று அதை தொடர்ந்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுகுறித்து, தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த தேவராஜன் கூறியதாவது:

இக்கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 87 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பணி மேற்கொள்வதற்கான டெண்டர் பணிகளும் முடிவுற்று பணிக்கான உத்தரவு ஆணை சமீபத்தில் கிடைக்க பெற்றுள்ளது.

இக்கோவிலுக்கு வரும் 15ம் தேதி, பாலாலயம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அதை தொடர்ந்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us