ADDED : டிச 31, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுமையிலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 70. இவர், கடந்த 28ல் வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது விஷப்பூச்சி கடித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.