sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அலுவலக கூரை பெயர்ந்து விழுந்ததால் மின் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

/

அலுவலக கூரை பெயர்ந்து விழுந்ததால் மின் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

அலுவலக கூரை பெயர்ந்து விழுந்ததால் மின் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

அலுவலக கூரை பெயர்ந்து விழுந்ததால் மின் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்


ADDED : நவ 27, 2024 11:09 PM

Google News

ADDED : நவ 27, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை துணை மின்நிலைய வளாகத்தில், ஓரிக்கை பகுதிக்கான உதவி பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இக்கட்டடம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் பொலிவிழந்த நிலையில் இருந்தது.

இந்நிலையில், நேற்று, காலை 8:00 மணிக்கு அலுவலகம் திறக்கப்பட்டு மின் ஊழியர்கள் வழக்கம்போல பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், காலை 9:40 மணிக்கு திடீரென அலுவலகத்தின் கூரையின் ஒரு பகுதி உள்ள சிமென்ட் பூச்சு காரை பெயர்ந்து விழுந்தது.

பணியில் இருந்த மின் ஊழியர்கள், அலறியத்து வெளியே ஓட்டம் பிடித்தனர். இதில், யாருக்கும் காயும் ஏற்படவில்லை. பின், உதிர்ந்து விழுந்த சிமென்ட் காரையை அகற்றிவிட்டு மீண்டும் பணியை தொடர்ந்தனர்.

பழமையான இக்கட்டடம் எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் என்பதால், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத கட்டடத்தில் அச்சத்துடன் பணிபுரிய வேண்டிய அவல நிலை உள்ளது என, ஓரிக்கை மின்பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us