sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இரவில் ஏற்பட்ட மின்தடையால் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

/

இரவில் ஏற்பட்ட மின்தடையால் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

இரவில் ஏற்பட்ட மின்தடையால் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

இரவில் ஏற்பட்ட மின்தடையால் மின்வாரிய அலுவலகம் முற்றுகை


ADDED : செப் 19, 2024 09:27 PM

Google News

ADDED : செப் 19, 2024 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகேயுள்ள வையாவூர், ஏனாத்துார் ஆகிய கிராமங்களில், நேற்றுமுன்தினம், இரவு 8:30 மணியளவில் மின்தடை ஏற்பட்டது.

இரவு 10:30 மணி வரை மின்சாரம் வராததால், அதிருப்தியடைந்த கிராமத்தினர், அருகேயுள்ள நல்லுார் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை, 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

மின்மாற்றி பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டிருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளையை மாற்றி தருவதாக அதிகாரிகள் தெரிவித்த போதும், நள்ளிரவு வரை மின் இணைப்பு கிடைக்காமல் இருந்துள்ளது.

இதனால், அதிருப்தியடைந்த கிராமத்தினர், தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய தயாராகினர். தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் மணிமேகலை, சம்பவ இடத்திற்கு சென்று, கிராம மக்களுடன் பேச்சு நடத்தி, சமாதானம் செய்தார்.

நள்ளிரவு 1:00 மணியளவில் மீண்டும் மின் இணைப்பு கிடைத்த பின், கிராமத்தினர் சமாதானமாகி வீடு திரும்பினர்.






      Dinamalar
      Follow us