/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேதாந்த தேசிகர் கோவிலில் யானை வாகனத்தில் உலா
/
வேதாந்த தேசிகர் கோவிலில் யானை வாகனத்தில் உலா
ADDED : அக் 09, 2024 12:00 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 756வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மஹோத்ஸவம் கடந்த 3ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் உற்வசத்தில் தினமும், காலையில் தங்க பல்லக்கில் வெவ்வேறு அலங்காரத்திலும், மாலையில், பல்வேறு வாகனத்திலும், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் துாப்புல் வேதாந்த தேசிகர், முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.
அதன்படி, ஆறாம் நாள் உற்சவமான நேற்று காலை, தங்கப்பல்லக்கில் வேணுகோபாலன் திருக்கோலத்திலும், மாலை, யானை வாகனத்திலும் எழுந்தருளிய வேதாந்த தேசிகர் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். ஏழாம் நாள் உற்சவமான இன்று காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ராமர் திருக்கோலத்தில் வேதாந்த தேசிகர் அருள்பாலிக்கிறார்.
அக்., 12ம் தேதி விளக்கொளி பெருமாள் மங்களாசாஸனமும், தேவாதிராஜன் பெரிய தங்க பல்லக்கில் பேரருளாளன் மங்களாசாஸனத்திற்கு அஞ்சலி திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.
அக்., 13ம் தேதி காலை, கந்தப்பொடி வசந்தம், தீபப்ரகாசருக்கு விமான உற்சவத்துடன், 11 நாட்கள் நடக்கும் துாப்புல் வேதாந்த தேசிகரின் வார்ஷீக மஹோத்ஸவம் நிறைவு பெறுகிறது.