/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் சாலையில் மண் அரிப்பால் பள்ளம்
/
வாலாஜாபாத் சாலையில் மண் அரிப்பால் பள்ளம்
ADDED : ஜூன் 20, 2025 11:17 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் வாலாஜாபாத் உள்ளது. காஞ்சி புரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இச்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், வாலாஜாபாத் மாசிலாமணி அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே துவங்கி, வெண்குடி எல்லை வரையிலான 500 மீட்டர் துாரத்திற்கு சாலையோரத்தில் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளமாக உள்ளது.
இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்க முடியாமலும், இரவு நேரங்களில் சாலையோர பள்ளம் தெரியாமலும் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இச்சாலையோர ஆபத்தான பள்ளங்களை மண் கொட்டி சமன்படுத்தி விபத்துகளை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.