sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

/

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு


ADDED : நவ 21, 2024 07:57 PM

Google News

ADDED : நவ 21, 2024 07:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பி.பார்ம்., பட்டம் மற்றும் டி.பார்ம்., பட்டய ஆகிய மருத்துவ சான்று பெற்றவர்கள், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக, நவ.,20ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, நவ.,30ம் தேதி வரையில் தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த மருந்தகம் அமைக்க, 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்தம் மற்றும் வாடகை கட்டடமாக இருக்கலாம். அதற்குரிய, சொத்து வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு ரசீது மற்றும் வாடகை கட்டடத்திற்கு உரிமையாளரின் ஒப்பந்தப் பத்திரம் ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு, 3 லட்ச ரூபாய் அரசு மானியம் இரு தவணைகளாக ரொக்கம் மற்றும் மருந்துகளாக வழங்கும். மேலும், கூடுதல் நிதி தேவைபடும் போது, கூட்டுறவு வங்கி கடன் வழங்கப்படும் என, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us