ADDED : செப் 06, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கண்தான விழிப்புணர்வு மனிதசங்கிலி நேற்று நடந்தது.
காஞ்சிபுரத்தில், 41வது கண் தான விழிப்புணர்வு வாரவிழாவின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் குமார்ஸ் கண் மருத்துவமனை சார்பில், கண்தான விழிப்புணர்வு மனிதசங்கிலி நேற்று நடந்தது.
குமார்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மோகன்குமார், கார்த்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் ரோட்டரி சங்க தலைவர் மருத்துவர் ஸ்ரீராம், செயலர் பாக்யராஜ், முன்னாள் தலைவர் குமார் ஆகியோர் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில், செயின்ட் மேரீஸ் துணை சுகாதார அறிவியல் நிறுவன மாணவியர், குமார்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.
