sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விவசாய நிலத்தில் விழுந்த மின்கம்பம்

/

விவசாய நிலத்தில் விழுந்த மின்கம்பம்

விவசாய நிலத்தில் விழுந்த மின்கம்பம்

விவசாய நிலத்தில் விழுந்த மின்கம்பம்


ADDED : மே 26, 2025 12:29 AM

Google News

ADDED : மே 26, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பாரதிபுரம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இப்பகுதி விவசாயிகள் ஏரி தண்ணீர் மற்றும் ஆழ்துளை கிணற்றிலிருந்து மின் மோட்டார் வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீரை கொண்டு, விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகின்றனர்.

இதற்காக, விளை நிலங்களில் மின் வாரியம் சார்பில், ஆங்காங்கே மின் கம்பங்கள் பொருத்தப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

அப்போது, மேனலூர் செல்லும் சாலையோர விளை நிலங்களில் நடப்பட்டிருந்த, மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உயிர்சேதம் தடுக்கப்பட்டது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் உள்ள பம்ப் செட்டுகளை இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, முறிந்து விழுந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பத்தை அமைத்து, மின் இணைப்பு வழங்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us