sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரும்புலியூர் ஏரிக்கு பாலாற்று தண்ணீர் திறப்பு கால்வாய் நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

/

அரும்புலியூர் ஏரிக்கு பாலாற்று தண்ணீர் திறப்பு கால்வாய் நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

அரும்புலியூர் ஏரிக்கு பாலாற்று தண்ணீர் திறப்பு கால்வாய் நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

அரும்புலியூர் ஏரிக்கு பாலாற்று தண்ணீர் திறப்பு கால்வாய் நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : நவ 16, 2024 12:56 AM

Google News

ADDED : நவ 16, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலான 690 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.

இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், இந்த தண்ணீரை கொண்டு அரும்புலியூர், சீத்தாவரம், காவணிப்பாக்கம், கரும்பாக்கம் பகுதிகளில் உள்ள 1,060 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும்.

அரும்புலியூர் ஏரிக்கு பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இருந்து தண்ணீர் செல்லும் வகையில், துணை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

பழையசீவரம் பாலாற்று தடுப்பணை நிரம்பி வழிந்தால், இக்கால்வாய் வாயிலாக தண்ணீர் சென்று, அரும்புலியூர் ஏரி நிரம்ப வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த தடுப்பணை வாயிலாக அரும்புலியூர் ஏரிக்கு தண்ணீர் செல்வதில், கால்வாயில் சில இடங்களில் தடை இருந்தது.

அதாவது, பாலாற்று தடுப்பணையில் இருந்து, அரும்புலியூர் ஏரிக்கான நீர்வரத்து கால்வாய் குறிப்பிட்ட சில இடங்களில் தாழ்வாக இருந்தது.

இதனால், கால்வாய் வாயிலாக வரும் தண்ணீர் தாழ்வான கரைப்பகுதி வழியாக ஆற்றில் மடைமாறி செல்லும் நிலை இருந்து வந்தது.

இதனால், அரும்புலியூர் ஏரிக்கான பாலாற்று நீர்வரத்து கால்வாயின் தாழ்வான பகுதிகளை உயர்த்தி கட்ட விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து, கடந்த மாதம் 29ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்க்கண்டேயன், உத்திரமேரூர் உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் கால்வாய் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

அதை தொடர்ந்து, பாலாற்று தடுப்பணையில் இருந்து, அரும்புலியூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் பகுதிகள் சீரமைத்தல் மற்றும் தாழ்வான பகுதிகளை உயர்த்தி கட்டுதல் உள்ளிட்ட பணிகள், நீர்வளத்துறை சார்பில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டது.

அப்பணிகள் முழுமை பெற்றதையடுத்து, நேற்று பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இருந்து, அரும்புலியூர் ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. உத்திரமேரூர் ஒன்றிய நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் அரும்புலியூர் விவசாயிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

மழை பொழிவு இல்லாமலேயே, பாலாற்று தடுப்பணை மூலம் அரும்புலியூர் ஏரிக்கு தண்ணீர் வரத்தால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us