sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் வேதனை

/

15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் வேதனை

15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் வேதனை

15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் வேதனை


ADDED : டிச 06, 2024 08:15 PM

Google News

ADDED : டிச 06, 2024 08:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழகத்தில் 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழையால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்றில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம் கிடப்பில் இருப்பது பற்றி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம், எப்போது செயல்பாட்டிற்கு வரும் என, விவசாயிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன், தென்பெண்ணையாறு -- பாலாறு இணைப்பு திட்டம் பற்றி ஆராயப்படுவதாக நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இரு ஆறுகளின் இணைப்பு திட்டம் பற்றி, கடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ந்தும் நடவடிக்கை இல்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தற்போதைய சூழலில், செய்யாறையும், தென்பெண்ணை ஆற்றையும் இணைத்திருந்தால், திருவண்ணாமலை வழியாக செய்யாற்றில் தண்ணீர் வந்திருக்கும்.

செய்யாற்றில் தண்ணீர் வந்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் செய்யாறு வழியாக, பாலாற்றிலும் தண்ணீர் வந்திருக்கும் என, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தென்பெண்ணையாற்றுக்கும், செய்யாற்றுக்கும் இடையே, 22 கி.மீ.,க்கு கால்வாய் வெட்டினால், இரு ஆறுகளையும் இணைத்து விடலாம் என, பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், 15 ஆண்டுகளாக ஆராயப்படும் இத்திட்டம் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என, மூன்று மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர்.

இத்திட்டம், 2013- - 14ம் ஆண்டு தமிழக அரசின் வரவு -- செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள நில ஆர்ஜித சட்டத்தின்படி, மதிப்பீடு திருத்தி அமைக்கும் பணிகள் நடப்பதாக, 2013ல் அதிகாரிகள் பதில் கூறி வந்தனர்.

தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம் பற்றி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2014ல் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடந்தது.

ஆனால், இத்திட்ட பணிகள் அப்படியே உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியிலும், அதைத் தொடர்ந்து தி.மு.க., ஆட்சியிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்கின்றனர்.

கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, அடுத்தகட்ட பணிகளை உடனடியாக அரசு துவக்க வேண்டும். பல ஆண்டுகளாக திட்டம் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் இத்திட்டத்தை தாமதம் செய்யக்கூடாது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், ஆண்டு முழுதும் செய்யாறு, பாலாற்றில் தண்ணீர் செல்லும்; நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

- கே.நேரு,

மாவட்ட செயலர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.






      Dinamalar
      Follow us