sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமான கீழ்ஒட்டிவாக்கம் ஏரிக்கரை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

/

சேதமான கீழ்ஒட்டிவாக்கம் ஏரிக்கரை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

சேதமான கீழ்ஒட்டிவாக்கம் ஏரிக்கரை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

சேதமான கீழ்ஒட்டிவாக்கம் ஏரிக்கரை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : செப் 13, 2025 12:57 AM

Google News

ADDED : செப் 13, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்ஒட்டிவாக்கம்:கீழ்ஒட்டிவாக்கம் பீமேஸ்வரர் கோவில் அருகில் சேதமடைந்த நிலையில் உள்ள ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், கீழ்ஒட்டிவாக்கம் ஏரிக்கரையை ஒட்டி புவனேஸ்வரி அம்பாள் சமேத பீமேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை.

இதனால், பக்தர்கள் ஏரிக்கரையின் மீது உள்ள ஒத்தையடி பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவில் அருகில் உள்ள ஏரிக்கரையின் ஒரு பகுதி மண் அரிப்பு ஏற்பட்டு, ஏரிக்கரை பலமிழந்து உள்ளதால், நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவ மழைக்கு கீழ்ஒட்டிவாக்கம் ஏரி முழுமையாக நிரம்புவதற்குள், மண் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில், ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டு பீமேஸ்வரர் கோவில் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் மழை வெள்ளநீரால் மூழ்கும் சூழல் உள்ளது.

எனவே, பீமேஸ்வரர் கோவில் அருகில் மண் அரிப்பால் சேதமடைந்து, பலமிழந்த நிலையில் உள்ள கீழ்ஒட்டிவாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்த நீர்வள ஆதுார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us