sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஜாகீர் தண்டலம் கண்டிகையில் வேகத்தடையால் விபத்து பயம்

/

ஜாகீர் தண்டலம் கண்டிகையில் வேகத்தடையால் விபத்து பயம்

ஜாகீர் தண்டலம் கண்டிகையில் வேகத்தடையால் விபத்து பயம்

ஜாகீர் தண்டலம் கண்டிகையில் வேகத்தடையால் விபத்து பயம்


ADDED : நவ 03, 2024 01:34 AM

Google News

ADDED : நவ 03, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில் இருந்து, திருமால்பூர் கிராமம் வழியாக, பனப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் பிரதான சாலை உள்ளது.

இந்த சாலையின் வழியாக பள்ளூர், கணபதிபுரம், காஞ்சிபுரம், புள்ளலுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்கு திருமால்பூர், பனப்பாக்கம், ஓச்சேரி ஆகிய பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர்.

இச்சாலை, இரு மாதங்களுக்கு முன்பு, குண்டும், குழியுமாக சேதமடைந்திருந்தன. கடந்த மாத இறுதியில், நெடுஞ்சாலைத் துறையினர் சேத பள்ளங்களில், தார் ஜல்லியை கொட்டி செப்பணிட்டனர்.

சமீபத்தில் பெய்த மழையால், தார் ஜல்லி கலவை பெயர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக உள்ளன. மேலும், ஜாகிர்தண்டலம் ஊராட்சியைச் சேர்ந்த கண்டிகை கிராமத்தில், அதே கிராமத்தினர் சிலர் சிமென்ட் ஜல்லி கலவையிலான வேகத்தடை அமைத்துள்ளனர். அதன் மீது, வெள்ளை நிற வர்ணம் அடிக்கவில்லை. வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை மீது செல்லும் போது நிலை தடுமாறி கவிந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

எனவே, அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட வேகத்தடையை அகற்ற வேண்டும். இல்லையெனில், வெள்ளை நிற வர்ணம் அடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us