ADDED : ஏப் 11, 2025 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம்அடுத்த எடையார்பாக்கம்ஏரியில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக, நேற்று முன் தினம் அவ்வழியாக சென்றவர்கள்சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற போலீசார்,உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், எடையார்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 42, என்பவர் கடந்த 9ம் தேதி ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிந்தது.