/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூதாட்டியிடம் செயின் ஆட்டை திருச்சி பெண்கள் ஐவர் கைது
/
மூதாட்டியிடம் செயின் ஆட்டை திருச்சி பெண்கள் ஐவர் கைது
மூதாட்டியிடம் செயின் ஆட்டை திருச்சி பெண்கள் ஐவர் கைது
மூதாட்டியிடம் செயின் ஆட்டை திருச்சி பெண்கள் ஐவர் கைது
ADDED : செப் 28, 2025 11:45 PM
மறைமலை நகர்:காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஆதனுார் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரது மனைவி பாஞ்சாலி, 62.
இவர் நேற்று முன்தினம் காலை, சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வந்தார்.
கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்து, நுழைவு பகுதி அருகே வழங்கப்பட்ட அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அதன் பின் பார்த்த போது, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் செயின் மாயமானது தெரிந்துள்ளது.
இது குறித்த தகவலின்படி வந்த மறைமலை நகர் போலீசார், கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், அன்னதானம் வழங்கும் இடத்தில் ஐந்து பெண்கள் மூதாட்டியை சுற்றி நின்று, ஒரு பெண் மட்டும் அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை கடித்து எடுக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்து, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கூறப்பட்டு, சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் பேருந்துக்காக காத்திருந்த அந்த ஐந்து பெண்களை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், பிடிபட்ட அந்த பெண்கள் திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியை சேர்ந்த மஞ்சுளா தேவி,42, சித்ரா,28, மீனா,31, முத்துமாரி, 60, அஞ்சலி, 30, என தெரிந்தது.
கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கும்பலாக சென்று தங்க நகைகள் அணிந்திருக்கும் பெண்களை குறி வைத்து திருடி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.