/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை கழிவு குவிப்பு வாலாஜாபாதில் சுகாதார சீர்கேடு
/
குப்பை கழிவு குவிப்பு வாலாஜாபாதில் சுகாதார சீர்கேடு
குப்பை கழிவு குவிப்பு வாலாஜாபாதில் சுகாதார சீர்கேடு
குப்பை கழிவு குவிப்பு வாலாஜாபாதில் சுகாதார சீர்கேடு
ADDED : ஏப் 27, 2025 01:44 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 12வது வார்டில், பி.கே., செட்டித் தெரு உள்ளது. இத்தெருவில் உள்ள வினாயகர் கோவில் பின்புறம் வழியாக கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் அருகாமையில் கடை வைத்திருப்போர் சிலர், இக்கழிவுநீர் கால்வாய் கரை மீது குப்பை கழிவை குவித்து வருகின்றனர்.
இந்த குப்பை கழிவில், காய்கறி மற்றும் இறைச்சி கழிவு கலந்திருப்பதால், அழுகலாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இச்சாலையில் நடந்து செல்லும் பல தரப்பு மக்களும் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
எனவே, பி.கே., செட்டித் தெரு, சக்தி மிகுந்த வினாயகர் கோவில் பின்புறம் சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலான இக்குப்பை கழிவை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

