/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி
/
பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி
ADDED : நவ 26, 2024 11:57 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில், வேளாண் அறிவியல் தொழிற்கல்வி பயிலும் மாணவ - மாணவியர், வேளாண் தொழிற்கல்வி ஆசிரியை சுவப்னா தலைமையில், பண்ணை சுற்றுலா திட்டத்தின் வாயிலாக, மேல் ஒட்டிவாக்கம் அரசு தோட்டக்கலை பண்ணைக்கு சென்றனர்.
அங்கு மாணவ- - மாணவியருக்கு தோட்டக்கலையைச் சார்ந்த 10 நாட்கள் நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பண்ணையில், இதில், தோட்டக்கலை அலுவலர் தினேஷ், உதவி தோட்டக்கலை அலுவலர் பாலா அரவிந்த் ஆகியோர், மாணவ- - மாணவியருக்கு குழித்தட்டு வாயிலாக நாற்று உற்பத்தி, மண் புழு உரம் தயாரித்தல், நவீன வேளாண்மை தொழில்நுட்பம், மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் ஆகியவை குறித்து செயல் விளக்கத்துடன்கூடிய பயிற்சி அளித்தனர்.