sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி வரதராஜர் கோவிலில் கருடசேவை உத்சவம் கோலாகலம் கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் பக்தி பரவசம்

/

காஞ்சி வரதராஜர் கோவிலில் கருடசேவை உத்சவம் கோலாகலம் கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் பக்தி பரவசம்

காஞ்சி வரதராஜர் கோவிலில் கருடசேவை உத்சவம் கோலாகலம் கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் பக்தி பரவசம்

காஞ்சி வரதராஜர் கோவிலில் கருடசேவை உத்சவம் கோலாகலம் கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் பக்தி பரவசம்


ADDED : மே 14, 2025 01:47 AM

Google News

ADDED : மே 14, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் காலை உத்சவத்தில், தங்க சப்பரத்திலும், மாலை, சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இரண்டாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலையில், ஹம்ஸ வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் எழுந்தருளி உலா வந்தார்.

மூன்றாம் நாளான நேற்று காலை, கருடசேவை உத்சவம் கோலாகலமாக நடந்தது. கோபுர தரிசனத்தை காண அதிகாலை 3:00 மணியில் இருந்தே பக்தர்கள் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபம் பகுதியில் குவிய துவங்கினர்.

அதிகாலை 4:50 மணிக்கு, கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், பக்தர்களுக்கு கோபுர தரிசனம் அளித்தார். பெருமாளை தரிசித்ததும், பக்தர்கள் வரதா, வரதா, அத்தி வரதா என்ற திருநாமத்தை உச்சரித்தவாறு, நைவேத்யம் செய்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

தொடர்ந்து, வரதராஜ பெருமாள் சன்னிதி தெரு, சி.எஸ்.செட்டித் தெரு, விளக்கடி கோவில் தெரு, முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், ராஜ வீதி, காமராஜர் வீதி, காந்தி சாலை வழியாக சென்று, மதியம் 1:20 மணிக்கு கோவிலை சென்றடைந்தார்.

காஞ்சிபுரத்தில் நேற்று வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இருப்பினும், வழிநெடுகிலும் பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கருட வாகனத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மாலை ஹனுமந்த வாகன உத்சவம் நடந்தது.

ஏழாம் நாள் உத்சவமான வரும் 17ம் தேதி தேரோட்டமும், 19ம் தேதி காலை, அனந்தசரஸ் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி உத்சவமும் நடக்கிறது.

பிரம்மோத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி, கோவில் பணியாளர்கள், கோவில் பட்டாச்சாரியார்கள், உபயதாரர்கள் இணைந்து செய்துள்ளனர்.

உத்சவம் துளிகள்


* கருடசேவை உத்சவத்தையொட்டி வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்திலும், சுவாமி வீதியுலா வந்த சாலைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
* பக்தர்களின் பாதுகாப்புக்காக, தீயணைப்பு மீட்பு பணி வாகனமும், 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சுவாமி வீதியுலாவில் உடன் வந்தது. உடல் சுகவீனம் ஏற்பட்டவர்களுக்கு வாகனத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
* பக்தர்களின் கால்கள் சுடாமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், டேங்கர் லாரி வாயிலாக சாலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியதால், நகர் முழுதும் குவிந்த குப்பையை துாய்மை பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றினர்.
* கருடசேவை உத்சவத்தில் சுவாமி வீதியுலா சென்ற சாலையின் குறுக்கே இடையூறாக இருந்த மின்ஒயர்களை மின் ஊழியர்கள் துண்டித்து வழி ஏற்படுத்தினர். சுவாமி சென்ற பின் மீண்டும் சீரமைத்தனர்.
* உத்சவத்தையொட்டி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினமே காஞ்சிபுரத்திற்கு வந்ததால், நகரில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் நேற்று ‛ஹவுஸ் புல்' ஆக இருந்தது.* கருடசேவை உத்சவத்தில், பல்வேறு பஜனை கோஷ்டியினர், பஜனை பாடல்களை பாடியபடியும், ஆஞ்சநேயர் வேடமணிந்து நடனமாடியபடியும் சென்றனர்.
* உத்சவத்தை காணவந்த பக்தர்களுக்கு, பல்வேறு இடங்களில் நீர்மோர், குளிர்பானம், புளியோதரை, பொங்கல், தயிர் சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.








      Dinamalar
      Follow us