sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பழையசீவரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் கருடசேவை விமரிசை

/

பழையசீவரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் கருடசேவை விமரிசை

பழையசீவரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் கருடசேவை விமரிசை

பழையசீவரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் கருடசேவை விமரிசை


ADDED : ஜூலை 02, 2025 11:17 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:பழையசீவரம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோத்சவ விழாவில், நேற்று முன்தினம் கருடசேவை உத்சவம் நடந்தது.

வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோத்சவம் விழா நடப்பது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதை தொடர்ந்து, தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜை, தீபாராதணை நடந்து வந்தது.

கடந்த 30ம் தேதி இரவு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி அப்பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தார். நேற்று முன்தினம் கருடசேவை நிகழ்ச்சி நடந்தது.

விழாவையொட்டி காலையில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு மேள தாள நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க, கருட வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆனி மாத கருடன் உத்சவம் நாளை மறுநாள் நடக்கிறது.

காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவத்தில், கருட சேவை உத்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல், ஆனி, ஆடி மாதங்களில், வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் நடக்கிறது. அதன்படி ஆனி மாதத்திற்கான ஆனி கருடன் உத்சவம் நாளை மறுநாள் நடக்கிறது.

இதையொட்டி, நாளை மறுநாள் மாலை 5:30 மணிக்கு, வரதராஜ பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார்.

தொடர்ந்து, கருடவாகனத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், ஆழ்வார் பிரகாரமாக வலம் வந்து பின், மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மாட வீதியுலா முடிந்து, இரவு 8:00 மணிக்கு பெருமாள் கோவிலில் வாகன மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இரவு, பெரியாழ்வார் சாற்றுமறை உத்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us