/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தெப்பத்தில் எழுந்தருளிய மாங்காடு காமாட்சி அம்மன்
/
தெப்பத்தில் எழுந்தருளிய மாங்காடு காமாட்சி அம்மன்
ADDED : ஜன 24, 2024 10:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் நேற்று தெப்பத்தில் எழுந்தருளினார்.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா நடக்கும்.
இந்தாண்டு தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. மாலை 6:30 மணிக்கு வெள்ளீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளினார்.
இதைத் தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி கோவில் குளத்தை சுற்றி வலம் வந்தார்.
இரவு 8:30 மணிக்கு யானை வாகனத்தில் காமாட்சி அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.