/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
அரசு கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : அக் 25, 2025 02:10 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் நடந்த 6-வது பட்டமளிப்பு விழாவில், 235 மாணவ - மாணவியர் பட்டம் பெற்றனர்.
உத்திரமேரூரில், டாக்டர். எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரியில் 1,100 மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.
நேற்று 6-வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி முதல்வர் சுகுமாறன் தலைமையில் நடந்தது.
கணிதத்துறை தலைவர் கலையரசி, இயற்பியல் துறை தலைவர் முத்து முன்னிலை வகித்தனர். கல்லுாரி கல்வித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இணை இயக்குநர் ராவணன் பங்கேற்று, 2020 -- 23 கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த, 235 மாணவ -- மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
இதில், பேராசிரியர்கள், மாணவ - மாணவியரின் பெற்றோர் பங்கேற்றனர்.

